Monday, July 19, 2010

தனியார் மயமாகிறதா மின்வாரியம்? க. தங்கராஜா

First Published : 19 Jul 2010
சேலம்: தமிழக மின்வாரியத்தில் பல்வேறு நிலைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே ஆள் பற்றாக்குறையால் வேலைப்பளுவில் தவிக்கும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

÷தமிழகத்தில் 1.41 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்பட 2.12 கோடி மின் இணைப்புகள் உள்ளன. கடந்த 2000-ம் ஆண்டில் 1.20 கோடி மின் இணைப்புகள் இருந்தன. ஆனால் 10 ஆண்டுகளில் மின் இணைப்புகளின் எண்ணிக்கை ஏறத்தாழ இரட்டிப்பாகி உள்ளது. ஆனால் அதற்கேற்ப மின்வாரிய ஊழியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.÷2002-ம் ஆண்டில் சுமார் 90 ஆயிரம் பேராக இருந்த மின்வாரியப் பணியாளர்களின் எண்ணிக்கை இப்போது 75 ஆயிரமாகக் குறைந்துள்ளது. முதல் வகுப்பு ஊழியர்களான மேல்நிலைப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்களின் எண்ணிக்கை கடந்த 2002-ல் 795 ஆக இருந்தது.

÷இரண்டாம் வகுப்பு ஊழியர்களான உதவிப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் எண்ணிóக்கை 8,171 ஆகவும் இருந்தது. 3-ம் வகுப்பு ஊழியர்களான தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாகவும், உதவியாளர்கள் நிலையிலான 4-ம் நிலைப் பணியாளர்கள் சுமார் 53 ஆயிரம் பேர் இருந்தனர்.

÷தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2,547 மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் இருக்க வேண்டிய நிலையில், இப்போது 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேட்டூரில் 1,728 ஊழியர்கள் பணியிடம் இருக்கும் நிலையில் 1,267 பேர் மட்டுமே இப்போது பணியில் உள்ளனர். எண்ணூர் அனல் மின்நிலையத்தில் 1,600 பணியிடங்களில் 779 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். வட சென்னையில் 1,974 இடங்கள் உள்ள நிலையில் 1,029 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

÷கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஓய்வு பெறும் பொறியாளர்கள், ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இப்போது பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்களுக்கு பணிச்சுமை மிகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே மின்சாரப் பற்றாக்குறை உள்ள நிலையில், மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள் எதுவும் பயனுக்கு வராமல், தொடர்ந்து காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது.

÷மின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மேட்டூர், எண்ணூர், வடசென்னை பகுதிகளில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மேற்பார்வை செய்வதற்காக, தரப் பரிசோதனை செய்வதற்காக, தனியாக ஆட்களை நியமிக்கவில்லை. சரியான மேற்பார்வை இல்லாததே மின் திட்டங்கள் பயனுக்கு வருவதை தாமதப்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பதாக அதிகாரிகள் குறை கூறுகின்றனர்.

÷நிலைமை இப்படி இருக்க, மேலும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது மின்வாரிய நிர்வாகம். தலைமைப் பொறியாளர் முதல் உதவியாளர் வரையிலான சில பதவியிடங்களை சரண்டர் செய்யுமாறும் பணியாளர்களை 60 ஆயிரமாகக் குறைப்பதே இலக்கு என்றும், கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு மின்வாரியத் தலைமை உத்தரவிட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிóக்கின்றன.

÷இதேபோல் சில பணிகளை அவுட்சோர்சிங் விடவும் மின்வாரியம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. வடசென்னையில் நிலக்கரியை ரயில்களில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பும் பணியை தனியாரிடம் ஒப்படைத்த மின்வாரியம் இப்போது வரை பிரச்னையையே சந்தித்து வருகிறது. வரும் காலங்களில் பொறியாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அரசு ஊழியர் அல்லாதவர்களை நியமித்து பணிகளைச் செய்யத் திட்டமிட்டு இருப்பதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: