Sunday, February 8, 2009

பிலம் உலக சமுக மாமன்றம் - ஓர் பகிர்வு

பிப்ரவரி 9:

கடந்த ஜனவரி 27 லிருந்து பிப்ரவரி 1ம் தேதிவரை நடைபெற்ற உலக சமுக மாமன்ற கூட்டம் பிரேசிலின் பீலாம் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய குடிமக்கள் அமைப்பின் சார்பில் அதன் தேசிய தலைவர் திரு. ஒய்.டேவிட், அவர்கள் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவத்தை பீல் பணியாளர் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார். அதன் சாரம்சம்.

இந்த உலக் சமுக மாமன்ற கூட்ட்த்தின் முக்கிய நோக்கம் வருடாவருடம் கூடும் உலக் பொருளாதார அமைப்பு மாநாட்டுக்கு எதிராக உலக மக்கள் சார்பில் கூடும் அமைப்புதான் உலக சமுக மாமன்றம். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இம்மாநாடு கூடும். நாட்டளவில், வட்டார அளவில் எப்பொழுது வேண்டுமானாலும் கூடும்.

இம்மாநாடு நடைபெற்ற இடம் உலக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் உலகத்தின் நுறையீரல் என பேற்றப்படும் அமேசான் காடுகள் மற்றும் ஆறு, அங்கு வாழும் பூர்வகுடிமக்கள் பிரச்சனைகள் என அமேசன் பிரச்சனையை பற்றி உலகம் புரிந்து கொள்வதற்காக இந்த மாநாடு இங்கு கூட்டப்பட்டது.

200 க்கும் மேற்பட்ட தலைப்புகள் இருந்தால்கூட அதிகம் பேசப்பட்ட தலைப்புகள் என பார்த்தால் முன்னிறுப்பது ஆதிகுடிகளின் நிலம் சார்ந்த பிரச்சனை, உலக பொருளாதார நெருக்கடி, மற்றும் பூமி சூடாதல்

1. ஆதிவாசிகள் பிரச்சினை:
ஆதிவாசிகளின் கலாச்சார, பொருளாதார, வாழ்வாதார உரிமைகள் பேசப்பட்டாலும் பிரச்சனைகளின் அடிப்படை நாதம் நிலம் சார்ந்த பிரச்சனைகள் முக்கிய இடம் பெற்றது. இது உலக அளவில் ஆதிவாசிகளுக்கு உள்ள பிரச்சனை ஆக உள்ளது.

2. உலக பொருளாதார நெருக்கடி.;
உலக பொருளாதார நெருக்கடி சார்ந்த பிரச்சனைகள் பற்றி அதிக அமர்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் உலக கிருத்தவர்கள் பேரவை (WWC) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இந்த அமர்வுகளில் பேசப்பட்ட விசயங்களின் சாரம்சம் முறையே
இன்றைய பிரச்சனைகளின் அடிநாதம் தொழிலாளர் வேலை இழப்பு, தொழில் நிறுவனங்கள் மூடுதல்
இந்த நிறுவனங்களை / கம்பெனிகளை மீட்டெடுக்க அரசாங்க பணத்தை கொட்டுதல்
இந்த ஆண்டு கூடிய G 8 மாநாடு கூட கம்பெனிகளை மீட்டெடுப்பது அவற்றை மருஉருவாக்கம் செய்வது அதுவும் இந்த முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளுக்குள் இந்த மாற்றங்களை செய்வது என முடிவு எடுத்துள்ளன.
இந்த கம்பெனிகள் மீட்டெடுப்பிற்கு ஏன் பொதுத்துறை பணம் செலவளிக்க வேண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
ஏன் இந்த பிரச்சனைகள் பற்றி G8, G20 மற்றும் பேசுகின்றன? ஏன் ஐ.நா. சபையில் இது பற்றி விவாதிக்கப்படவில்லை? உலக வங்கியை ஏன் மாற்றி அமைக்ககூடாது? இந்த பொருளாதார கொள்கையை ஏன் மாற்றகூடாது?
இதுவரை கொடுக்கப்பட்ட நஷ்ட ஈட்டு பணம் தொழில்களை மறு உருவாக்கம் செய்ய பயன்படவில்லை.

3. உலகு வெப்பமயமாதல்
நிறைய அரங்குகள் உலக வெப்பமயமாதல் பற்றிய பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டது. இந்த அரங்குகளில் விவாதிக்கப்பட்ட விசயங்களில் மிகமுக்கியமானது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 2009 க்கான ஹோபன்செகன் மாநாட்டிற்கு எவ்வாறு மக்கள் அமைப்புகள் தயார் ஆவது என்பதற்கான விசயங்கள் அதிகம் பேசப்பட்டது. நாமும் கூட இதைப்பற்றி சிந்திப்பது அவசியம்.

இது தவிர்த்து உலக ஆன்மிக தலைவர்கள் மாநாடு, இனரீதியான ஒதுக்கீடு தொடர்பான விசயங்கள், பாலஸ்தீன பிரச்சினை என 200க்கும் மேற்பட்ட அமர்வுகள் நடந்தேறின.

இக்கூட்டத்தில் ஜோதிமணி, வசந்தி, வர்த்தினி, மரியசெல்வம், ராஜா, முருகேசன், சுகுமார், தனராஜ், நாகலிங்கம், நாதன், மற்றும் மாரிராஜன் அகியோர் கலந்து கொண்டனர்.

ஆக்கம்.
மாரிராஜன்.தி

Friday, February 6, 2009

உலகவங்கியின் அயெம்வார்ம் திட்ட மதிப்பீட்டு குழுவிடம் ஜாசூல் மாவட்ட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் கண்மாய்களை தனியார்மயமாக்ககூடாது என கோரிக்கை மனு

ஆத்தூர் - சேலம்:
வஸிஸ்த்தா நதி துணைவடிநிலப்பகுதி நீர்வள நிலவள மேம்பாட்டு திட்டம் - சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி வட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வஸிஸ்தா நதியில் பெத்தநாயக்கன்பாளையம் வரை 33 அணைக்கட்டுகள், 16 ஏரிகளில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களை ஜாசூல் சேலம் மாவட்ட குழுவின் சார்பில் கடந்த ஆக்டோபர் 3,4,5 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தது. சுமார் 100 கி.மீ பயணம் செய்த ஆய்வு குழு ஏரிகளில் செய்யப்படும் சிமெண்ட் சார்ந்த பணிகள் மேலோட்டமாக இருந்ததை கண்டதது. நல்ல கட்டமைப்புகளாய் இல்லாததை நேரடியாய் கண்டது. இக்குழு தான் கண்ட விசயங்களை ஜாசூல் கோரிக்கைகளுடன் இணைத்து அக்டோபர் மாதம் 5ம் தேதி, ஆத்தூர் வந்த உலகவங்கி அயெம்வார்ம் திட்ட அமலாக்க (World Bank implementation Support Mission – WBISM) குழுவிடம் கொடுத்தது. முதலில் மனு கொடுக்க சில விவசாயிகளை அதிகாரிகள் உள்ளூர் பெரிய விவசாயிகளின் துனையுடன் அனுமதிக்கவில்லை. ஆனாலும் விவசாயிகள் கூட்டத்தில் முந்திச்சென்று திட்டம் சரிவர நிறைவேற்றப்படவில்லை, எல்லாம் ஏமாற்று வேலை என கோஷமிட்டு மனு அளித்தனர். அதனை மொழி பெயர்த்தவர் என்னவாறு மொழி பெயர்த்தார் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அரசு அதிகாரிகள் உலகவங்கி குழுவினரை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் அழைத்து சென்று படம் காட்டியது நன்றாக இருந்தது.

விழுப்புரம்:

கடந்த அக்டோபர் 21ம் தேதி உலக வங்கியின் அயெம்வார்ம் திட்ட அமலாக்க கண்காணிப்பு குழுவினர் கலெக்டர் தலைமையில் கருத்து கேட்டனர். கிராமங்களில் மனு அளிக்க காத்திருந்த விவசாயிகள் உலகவங்கி குழுவின் பயணம் பாதியில் நிற்த்தப்பட்டதால் மாவட்ட அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். இங்கு ஜாசூல் விழுப்புரம் மண்டலம் சார்பில் (கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை) கோரிக்கை மனு அழிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட அயெம்வார்ம் (IAMWARM) திட்டத்தில் கண்மாய்களை சரிவர தோண்ட கோரி கிராம மக்கள் போரட்டம்

(இத்திட்டம் நடைபெறும் பகுதிகளில் உள்ள சமுகசெயல்பாட்டாலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஜாசூல் மாநில அமைப்பின் சார்பில் தொடர் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் கடந்த 2007 பிற்பகுதியில் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. ஆர்வமுடைய செயல்பாட்டாளர்கள் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கம் (Sustainale Livelihood Farmers Association – SLFA) என்ற அமைப்பின் கீழ் சிறிய அளவில் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு செயல்பட்டு வரும் மிகச்சில செயல்பாட்டாளர்களில் திரு. பாலசுப்பிரமணியும் ஒருவர். இனி அவருடைய செயல்பாடுகளை பற்றி...... )

திட்ட நோக்கம்:

பெருகிவரும் மக்கள் தொகையினால் 2001ல் தனிநபர் சராசரியில் 1820 செமீ என்ற அளவில் கிடைக்கப்பெற்ற நீர் 2025ல் 1340 கனமீட்டராக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பருவமழை பொய்த்தல், நீர்பிடிப்பு மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் நீர் ஆதாரமான பாசான அமைப்புகளுக்கு சரிவர நீர் கிடைக்கவில்லை. வேளாண் உற்பத்தி, உற்பத்தி திறன் கூடுதலாக்க நீர், நீராதார அமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த திட்டம்தான் நீர்வள நிலவள திட்டம். இதில்:
1.பொதுப்பணித்துறை - நீர்வள ஆதார அமைப்பு
2.வேளாண் பொறியியல் துறை
3.வேளாண்மைத்துறை
4.தோட்டக்கலைத்துறை
5.வேளாண் விற்பனைத்துறை
6.வேளாண் பல்கலை கழகம்
7.கால்நடைத் துறை
8.மீன்வளத்துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்படுத்துவது.

உலக வங்கி கடனுதவி:

தமிழகம் 17 வடிநிலங்களாகவும், 113 உபவடிநிலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 16 வடிநிலங்களில் உள்ள 63 உபவடிநிலங்களில் உலகவங்கி கடனுதவியின் கீழ் 2547 கோடி செலவில், பொதுப்பணித்துறைக்கு மட்டும் 1530 கோடி செயல்படுத்தப்படுகிறது.

கோட்டக்கறையாறு மற்றும் மணிமுத்தாறு உபவடிநிலம்:

சிவகங்கை மாவட்டமானது, தமிழகத்திலேயே அதிகமான கண்மாய்களை உடைய மாவட்டமாகும். இங்கு சிரிதும், பெரிதுமான 615 பொதுப்பணித்துறை கண்மாய்களும், 3968 பஞ்சாயத்து யூனியன் கண்மாய்களும் உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உற்பத்தியாகி ஓடக்கூடிய கோட்டக்கரையாறு, மணிமுத்தாறு இரண்டுமே காட்டாறுகளாகும். மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓடும் நீரை தேக்கி வைக்க எந்த ஏற்பாடும் இல்லாத ஆறுகளாகும்.

கோட்டகரையாறு உபவடிநிலம் (55.77 கோடி)

நிதி ஒதுக்கீடு:
1.பொதுப்பணித்துறை - 42.96 கோடி
2.வேளாண் பொறியியல்துறை - 7.44 கோடி
3.வேளாண்மைத்துறை - 1 கோடி
4.தோட்டக்கலைத்துறை - 3.67 கோடி
5.வேளாண் விற்பணைத்துறை - 0.33 கோடி
6.கால்நடைத்துறை - 0.15 கோடி
7.மீன்வளத்துறை - 0.27 கோடி
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் 309 கண்மாய்கள், கால்வாய்கள் தூர்வாருதல், மற்றும் மடைகள் பழுதுபார்த்தல் செயல்பட உள்ளது.

மணிமுத்தாறு உபவடிநிலம் - 70.03 கோடி

இவற்றின் பெரும்பாலன கண்மாய்கள், திருப்பத்தூர், காரைக்குடி தாலுகாக்களை சார்ந்தவை. இவற்றின் கீழ் 407 கண்மாய்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளன. இதன் பகுதியில் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
1.பொதுப்பணித்துறை - 55.58 கோடி
2.வேளாண் பொறியியல்துறை - 6.51 கோடி
3.வேளாண்மைத்துறை - 2 கோடி
4.தோட்டக்கலைத்துறை - 3.67 கோடி
5.வேளாண் விற்பணைத்துறை - 0.55 கோடி
6.கால்நடைத்துறை - 0.29 கோடி
7.மீன்வளத்துறை - 0.34 கோடி

பணிகள் நிறைவேற்றுதல்:

உலக வங்கியின் ஆலோசனை அடிப்படையில் மக்கள் பங்கேற்புடன் (Participatory Irrigation Management – PIM) என்ற கொள்கையின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். திட்டத்தின் நோக்கம், செயல்படுத்தும் பணிகள் குறித்து அனைத்து துறைகளும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கென மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் என்ற பெயரில் ஒரு நடத்தப்படுகின்றது. 653 கண்மாய் பகுதி மக்கள் பயன்பெறும் இவ்வளவு பெரிய திட்டம் பெரும்பாலன மக்களுக்கு தெரிவிக்காமலேயே நிறைவேற்றப்படுகின்றது. அனைத்து துறைகள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், உரங்கள், இயந்திர கருவிகள், பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். (2007ல் துவங்கி 2013 முடிக்கப்படவேண்டிய திட்டம்)


பாலசுப்பிரமணி அவர்களின் தலையீடு:

இப்பணிகளை பற்றிய தகவல்களை பெறுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் விடாமல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அன்பாக கேட்டு, அதிகாரத்துடன் கேட்டு பெற குட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டதாய் அடிக்கடி விவசாயிகளின் கூட்டங்களில் கூறுவார். இத்தனை தமிழ்நாட்டில் ஒரளவிற்கு எல்லாதகவல்களும் அடங்கிய திட்டவிளக்க புத்தகம் அச்சடித்த ஒரிரு மாவட்டங்களில் சிவகங்கையும் ஒன்றும். உலகவங்கியால் புகழப்படும், ஆட்கள் அதிகம் வந்து பார்க்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், தனது கவுண்ஸ்லுக்குட்பட்ட பணிகளை பற்றி நேரடியாகவும், மக்களிடம் கேட்ட தகவல்களின் அடிப்படையில் கீழ்கண்ட குற்றச்சாட்டுகளை பத்திரிக்கைகள் மற்றும் ஒன்றிய கவுன்ஸ்ஸில் கூட்டங்களில் எலுப்பினார்.

ஒன்றியு கவுன்ஸ்சிலர் குற்றச்சாட்டு:

மானாமதுரை ஒன்றியத்தில் 28 கண்மாய்கள் இத்திட்டத்தின் கீழ் வருகின்றன. அவற்றில் எனது கவுன்சிலுக்கு உட்பட்ட மேலநெட்டூர், தெ.புதுக்கோட்டை பஞ்சாயத்துகளில் மட்டும் சுமார் 3200 ஏக்கர் பாசன வசதி பெறும் 12 கண்மாய்கள் வருகின்றன. ஆனால் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பாக நடத்தப்பட்ட எந்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களுக்கு அழைப்பு கிடையாது. திட்டம் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. சிவகங்கை மாவட்டத்தின் முகத்தோற்றத்தை மாற்றக்கூடிய இந்த திட்டத்தை ஒழுவு மறைவின்றி தமிழக அரசு நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலநெட்டூர் பகுதி - ஜாசூல் கள ஆய்வு:

இதனை தொடர்ந்து, 2008 ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நெட்டூர் கண்மாய் பகுதிகளில் அயெம்வார்ம் திட்டத்தினுடைய நீர்வள ஆதார அமைப்பின் சார்பிலான உலகளாவிய டெண்டர் அடிப்படையில் விடப்பட்டு அதன்பேரில் ஈரோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர் பணிகளை செய்தார். பார்த்தீபனூர் மதகுஅணையின் வலது பிரதான கால்வாய் பகுதியில் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் அரசின் மதிப்பீட்டின்படி தூர்வாரப்படாமல் அவசர கதியில் நடைபெற இப்பணிகளை பாரம்பரிய ஆயக்கட்டுதாரர்கள் அமைப்பின் மூலம் தடைசெய்யப்பட்டது. மூன்று நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டது. அதற்கு பொருப்பான அதிகாரிகளை அழைக்க அவர்கள் வர தாமதம் செய்த நிலையில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் திரு. பாலசுப்பிரமணியம் (ஒன்றிய கவுன்ஸ்லர் - மானாமதுரை ஒன்றியம்) அவர்களின் அழைப்பின் பேரில் ஜாசூல் அமைப்பின் சார்பில் நடைபெற்றுவரும் பணிகளில் உள்ள குளறுபடிகளை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 21ம்தேதி மேற்கொள்ளப்பட்ட களமேற்கொள்ளப்பட்டது. இக்கள ஆய்விற்கு ஜாசூல் மாநில ஒருங்கினைப்பாளர் திரு. மாரிராஜன், கவுண்ஸ்லர் பாலசுப்பிரமணியம், நெட்டூர் பஞ்சாயத்து தலைவர், நீரிணை பயன்படுத்துவோர் சங்க தலைவர், அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்புடன் பணிப்பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. 2மீட்டர் அளவிற்கு ஆழப்படுத்தப்பட வேண்டும் என எஸ்ட்டிமேட்டில் கூறப்பட்டுள்ள இடங்களில் பணி நடைபெற்ற பின்னர் அந்த இடங்களில் புற்கள் அப்படியே இருந்தது கண்டு மக்கள் கொதிப்படைந்து போயினர். 1ஸ்கொயர் மீட்டர் அளவிற்கு மண்ணை அப்புர்றப்படுத்தி கரையில் போட்டு சமப்படுத்த குட்டத்தட்ட ரூ. 14000 என ஒதுக்கப்பட்ட உலகளாவிய டெண்டரில் செய்யப்பட்ட (2 மீட்டர் ஆழப்படுத்தப்பட்ட அல்லது மண் அள்ளப்பட்ட இடத்தில்) புல் கூட புடுங்கப்படாத நீர்நிலவள திட்டத்தின் செயல்பாடுகள் அதற்கு பின்னால் வரவிருக்கின்ற உலகவங்கி நிபந்தனைகள் பற்றி விளக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1.பணிகளுக்கு பொருப்பான அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்து பணிகளை முறையாக செயல்படுத்த வைப்பது.
2.ஏற்கெனவே பணிமுடிவு பெற்றதாக கூறப்பட்டுள்ள இடங்களில் திரும்பவும் எஸ்ட்டிமேட்டில் உள்ளபடி பணிகளை செய்யவைப்பது அதுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புல்டோசர்களை செயல்பட அனுமதிக்ககூடாது.
3.திட்டத்தின் நோக்கத்தை பற்றி அதிகாரிகளை தெளிவுபடுத்த கோறுவது மற்றும் கிராம சபைகளில் அதனை பற்றி விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த தீர்மானங்கள் அதிகாரிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகரிகள் வந்து மக்களிடம் மன்னிப்புகோரி, தவறு நடக்காமல் பார்த்துகொள்வதாக உறுதியளித்தன் பேரில் தற்பொழுது பணிகள் நடைபெறுகின்றது.

சுப்பன் கால்வாய் மோசடி குறித்த போராட்டம்:

இதனை தொடர்ந்து திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் கவுண்ஸ்லுக்குள் வரும் அயெம்வார்ம் திட்டத்தின் சுப்பண் கால்வாய் திட்டத்தில் நடைபெற்று வரும் முறைகேடு பற்றி பாலசுப்பிரமணி அவர்கள் கவுண்ஸில் கூட்டத்தில் பேச, அது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஆழமாக பதிந்து அதனைத்தொடர்ந்து தொடர் போரட்டம், பஸ் மறியல் என போரட்டம் திசை மாற மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு சுப்பண் கால்வாய் பணிகளை சரிவர செய்ய தான் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இப்போரட்டங்கள் அதனை தொடர்ந்து எழுந்துள்ள உலகவங்கிக்கெதிரான, ஊழலுக்கெதிரான மக்கள் எழுச்சியை எவ்வாறு சரியான பதையில் கொண்டு செல்வது என்பது பற்றிய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் விதமாக நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கத்தின் கிளைகளை உருவாக்குவது பற்றி சிந்திக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை சிவகங்கை மாவட்ட ஜாசூல் அமைப்பின் மாவட்ட குழு திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கை செய்திகள் மற்றும் நிழல் படங்களுக்கு இங்கே சொடுக்கவும் http://picasaweb.google.co.in/jasul.tn/KottakoraiyaruSubBasinMellanatturTankFactFindingVisit#

ஆக்கம்:
மாரிராஜன்.தி
மாநில ஒருங்கிணைப்பாளர் - ஜாசூல் தமிழ்நாடு

உலகவங்கி நிபந்தனை கடனின் கீழ் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் தமிழ்நாடு நீர்நிலவள திட்டம் (IAMWARM) குறித்த விவசாயிகள் - சமூக செயல்பாட்டளர்கள் கலந்தாய்வ

கலந்தாய்விற்கான பின்னணி:

இதுவரை தமிழக அரசுகளால் கடந்த 1995களில் இருந்து உலக மயமாக்கல் கொள்கைகளுக்கு ஏற்ப தமிழக அரசின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் நீர் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் அரசின் பொதுப்பணித்துறை உலக வங்கி கொள்கைகளுக்குகேற்ப மாற்றியமைக்க தமிழ்நாடு நீர்வள ஆதார தொகுப்பு திட்டம், நீரியல் திட்டங்கள், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் என்ற பெயர்களில் தொடர்ச்சியாய் கடன்கொடுக்கப்படுகின்றன. இக்கடன்களின் முக்கிய நோக்கம் நீரை வணிகமயமாக்குவது, அதற்கான அமைப்புகள், கொள்கைகளை உருவாக்குவது ஆகும். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன.

ஆரம்ப கட்ட பணிகளின் ஒரு முக்கிய திட்டம் தமிழக அரசினால் மேற்கொள்ளப்பட்ட அனுமா நதி துணைவடிநிலப்பகுதி மாதிரி திட்டம் ஆகும். இதனை உலகவங்கி தெற்காசியவிலேயே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை நல்லநிலைமைக்கு உயர்த்தியுள்ளது என தன்னுடைய அறிக்கைகளில் நற்சான்று அளித்துள்ளது. ஆனால் நடைமுறையில் இத்திட்டம் பற்றிய ஜாசூல் ஆய்வில் கிடைத்த தரவுகள் அதிர்ச்சி அளிக்க கூடிய இருந்தது. ஒட்டுமொத்தமாய் தண்ணீரை, விவசாய முறைகளை, உணவு உற்பத்தியை சீர்குலைக்ககூடிய முறையில் இருந்ததை காண முடிந்தது. (ஆய்வறிக்கை இணைக்கப்பட்டுள்ளது).

இந்த அனுமா நதி திட்டம் இன்று தமிழக அளவில் நீர்வள நிலவள ஆதார திட்டம் என்ற பெயரில் 63 துணைவடிநிலப்பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்டு கடந்த 2007ல் இருந்து பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் நடைபெறும் விதம் அதன் செயல்பாடுகளை ஜாசூல் அமைப்பின் மாவட்ட குழுக்கள் கண்காணித்து வருகின்றன. இதுவரை கிடைக்கப்பெற்ற அனுபவங்களை அடிப்படையாக கொண்டு தமிழக அளவில் நீர்வள நில வள திட்டம் செயல்படுத்தப்படும் 63 துணை வடிநிலப்பகுதிகளிலும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவது, அதற்கான ஆயத்தகட்ட பணிகளில் ஈடுபடும் பொருட்டு விழப்புரம், பெரம்பலூர், மதுரையை மையப்படுத்திய மண்டல அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது என ஜாசூல் மாநில குழு முடிவு செய்தது.

கலந்தாய்வின் நோக்கம்:

  • உலக வங்கியின் கடனுதவி அல்லது நிதியுதவியின் கீழ் நடத்தப்படும் திட்டங்கள் நீர் மீதான சமுதாய உரிமையை எவ்வாறு தனியார்மயமாக்குகின்றன, அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகள் என்ன?

  • உலக வங்கி கடனுதவியின் கீழ் துவங்கப்பட்டுள்ள தமிழக நீர்வள நிலவள திட்டத்தின் நோக்கம், நடைமுறைப்படுத்தப்படும் விதம், எங்கெங்கு செயல்படுத்தப்பட உள்ளது?

  • மத்திய, மாநில அரசு, உலகவங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் தனியார் மயமாக்கல் முயற்சிகளை எவ்வாறு எதிர்கொள்வது?

கலந்தாய்வு விபரம்:



தென்மண்டலம்

மத்திய மண்டலம்

வடமண்டலம்

நாள்

16, 17 மே மாதம் 2008

21, 22 டிசம்பர் மாதம் 2008

10, 11 அக்டோபர் மாதம் 2008

12, 13 அக்டோபர் மாதம் 2008

இடம்

பீல் இயற்கை விவசாய பண்ணை, சின்னசாக்கிளிபட்டி, மதுரை

இட்பா மையம், பெரம்பலூர்

கவசம் தொண்டு நிறுவனம் பயிற்சி மையம், விலுப்புரம்

செம்மகளீர் மையம், திருப்பத்தூர்

பங்கேற்பாளர்கள்#

57

43

28

22

பங்கேற்பாளர்கள்#:

தமிழ்நாடு நீர்வள, நிலவள செயல்படுத்தப்படுகின்ற 63 துணைவடிநிலப்பகுதிகளை சார்ந்த விவசாய பிரதிநிதிகள், நீரிணை பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள், ஆயக்கட்டுதாரர் சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவனபிரதிநிதிகள்,

பேசப்பட்ட விசயங்களை பற்றி அறிய தென் மண்டல நிகழ்வுகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

முதல் நிகழ்வுகள் (16/05/2008):

தொடக்க நிகழ்வாக திருமதி. சாந்தி, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் அவர்களின் வரவேற்புறையுடன் பயிற்சி 11.30 மணிக்கு துவங்கியது. அதனை தொடர்ந்து திரு. மாரிராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பயிற்சியின் நோக்கம், இரண்டு நாள் அமர்வுகளில் விவாதிக்கப்பட உள்ள தலைப்புகள் பற்றி விளக்கினர்.

முதல் அமர்வுகள்: கிராமப்புற வாழ்வாதாரங்களும் உலகமயமாக்கலும் - திரு. ஒய். டேவிட், மாநில அமைப்பாளர், ஜாசூல்

திரு. ஒய். டேவிட், மாநில அமைப்பாளர் அவர்கள் தன்னுடைய உரையில் உலகமயமாக்கலின் வரலாறு, அதன் புதிய தாரளவாத தத்துவம், உலகமயமாக்கலின் கீழ் இந்தியா, தமிழ்நாடு, மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களான நீர், நிலம், விவசாயம், கால்நடைகள், காடுகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் விளைவுகள், இதற்கான மக்களின் மாற்றுகள், மாற்றுகளை முன்னெடுத்து செல்வதில் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதன் அவசியம் பற்றி விளக்கினார்.

இரண்டாம் அமர்வு: அனுமா நதி மாதிரி திட்டம் - திரு. செல்லத்துரை, பஞ்சாயத்து தலைவர் மற்றும் நீரிணை பயன்படுத்துவோர் சங்க தலைவர்

மதிய உணவிற்கு பின்பு துவங்கிய இரண்டாம் அமர்வில் திரு. செல்லத்துரை அவர்கள் தங்கள் பகுதியில் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்றும் தேவையில்லாத, அப்பகுதி சூழ்நிலைக்கு பொருத்தமில்லாத பல திட்டக்கூறுகளால் பணம் வீணடிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். திட்டமிடல் மக்களிடம் இருந்து செய்யப்படவேண்டும் என்றும் அதனை செயல்படுத்தும்போது அதனை உண்மையிலேயே கண்காணிக்க அந்தந்த சங்கங்களுக்கு அதிகாரம் தரப்படவேண்டும் என்றும் வழியுறுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக விவசாய விலைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கொடுக்கும் கொள்கை இருந்தால் விவசாயிகளுக்கு இது போன்ற வெளிநாட்டு கடன் திட்டங்களுக்கு வேலையே இல்லை என்றார். தாங்கள் பகுதி விவசாயிகள் ஏமாற்றப்பட்டது போல் இல்லாமல் மற்ற பகுதி விவசாயிகள் விழிப்போடு இருப்பது அவசியம் என்றார். மேலான விவரங்களுக்கு ஜாசுல் அமைப்பின் அனுமா நதி திட்டம் குறித்த ஆய்வறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் அமர்வு: தமிழக நீர்மேலாண்மை திட்டங்களும் உலகவங்கியின் உள்நோக்கங்களும் - திரு. மாரிராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாசூல்

மாலை 4.30 மணிக்கு துவங்கிய மாலைநேர அமர்வில் திரு. மாரிராஜன் அவர்கள் கடந்த 20 வருடங்களாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உலக வங்கியின் நீரியல் திட்டங்களின் நோக்கம், கடனுக்கான நிபந்தனைகள், துறைசார்ந்த சீர்திருத்தங்களினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சட்டங்கள், மற்றும் அமைப்புகள் பற்றி விளக்கினார். முடிவாக பங்கேற்பாலர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். மூன்றாம் அமர்வு சரியாக மழையின் இடையூறுகளுக்கிடையே இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது.

நான்காம் அமர்வு: குழு விவாதம்

இரவு உணவு இடைவேளைக்கு பின்னர் மாவட்ட வரியாக பங்கேற்பாளர்கள் இனைந்து தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகின்ற, செயல்படுத்தப்பட உள்ள துணைவடிநிலப்பகுதிகளில் உள்ள பிரச்சினைகள், விவசாயிகளை ஒருங்கிணைப்பது சம்பந்தமாக குழு விவாதம் செய்தனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (17/05/2008):

விழிப்புணர்வு பாடல்களுடன் துவங்கிய இரண்டாம் நாள் அமர்வுகளின் துவக்கமாக முதல் நாள் குழு விவாத அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஐந்தாம் அமர்வு: தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டம் - திரு. பாலசுப்பிரமணி, பொறியாளர் மற்றும் ஒன்றிய கவுன்ஸ்லர், மானமதுரை, சிவகங்கை.

திரு. பாலசுப்பிரமணி அவர்கள் பேசும்போது ஒட்டுமொத்தமான திட்டப்பின்னனி, திட்டத்தின் கூறுகள், இணைந்து செயல்படுகின்ற ஒன்பது துறைகளின் தனித்தனியான பணிகள், அவை நடைமுறைப்படுத்தும்போது உள்ள பிரச்சனைகள், அரசு இயந்திரத்தின் இயலாமை, திட்டம் பற்றி தகவல் பெறுவதில் உள்ள இடர்பாடுகள் பற்றி விளக்கமளித்தார். தாங்கள் பகுதியில் (கோட்டகொரையாறு) கடந்த ஒரு வருடமாக திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் எந்தவொரு வேலையும் முழுமையாக நடைபெறாமலேயே நன்றாக நடைபெறுவதாக பொய் அறிக்கைகள் கொடுப்பது என களத்தில் உள்ள நேரடிப்பிரச்சனைகள் பற்றியும் விவசாயிகளின் நேரடி கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார். திட்ட கூறுகள் பற்றிய விளக்கம் இணைக்கப்பட்டுள்ளது. தேனீர் இடைவேளைக்கு பிந்தைய நேரத்தில் திரு. ஆலாத்தூர், கிருதுமால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் அவர்கள் கிருதுமால் பாசன விவசாயிகள் கடந்த அரை நூற்றாண்டுகளாக சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் முல்லை பெரியார் அணைக்கட்டு பிரச்சனை பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

ஆறாம் அமர்வு: திட்டமிடல்

இதணை தொடர்ந்து ஆறாவது மற்றும் இறுதி அமர்வினை திரு. ஒய். டேவிட் மற்றும் திரு. ஜான்சன், மாநில குழு உறுப்பினர், ஜாசூல், காஞ்சிபுரம் ஆகியோர் வழிநடத்தினர். இதில் உலக வங்கியின் தேவை, அதன் அமைப்புமுறை, கடன்கள், நிபந்தனைகள், இதுவரை ஆற்றியுள்ள பணிகளை பற்றிய உள்ளூர் மக்களின் மதிப்பீடுகள் விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில் கீழ் கண்ட கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகள் மத்தியில் எழுப்புவது தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசிற்கான கோரிக்கைகள்:

1. வெளிநாட்டு கடன்கள் வாங்குவது போன்ற மிகமுக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கும்போது அதுசம்பந்தமாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்

2. அதோடுமட்டுமல்லாமல் மக்கள் மன்றத்தில் இது சம்பந்தமான விவாதங்களுக்கு ஏற்பாடு செய்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்

3. விவசாயிகள் - விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கண்டிப்பாக இடம்பெறல் வேண்டும்

4. கிராமசபை கூட்டங்களிலும் விவாதிக்கப்படவேண்டும்

5. அனுமாநதி மாடல் திட்டம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்

துணைவடிநிலப்பகுதிவாரியான கோரிக்கைகள்:

6. ஒவ்வொரு துணைவடிநில பகுதிகளிலும் அந்தந்த பகுதிகளுக்கேற்றவாறு மக்களோடு உட்கார்ந்து கலந்து பேசி திட்டம் தயார் செய்து அதை செயல்படுத்த வேண்டும். திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் பகுதிவாரியாக மக்களுக்கு முன்தேதியே குறிப்பிட்டு கால அவகாசம் அளித்து முழுநாள் கூட்டமாக நடைபெற்று அதனடிப்படையில் திட்டம் தயாரிக்கவேன்டும்.

7. பாசன சங்கங்களை உருவாக்கி, பயிற்சி நடத்தி, திட்டம் குறித்த முழு விபரம் தெரிவித்து அதன் பின்பு தான் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.

நடந்து முடிந்த வேலைகளை பற்றி பாசன விவசாயிகள் சங்கம், கிராம சபைகளில் வைத்து ஒப்புதல் பெற வேன்டும்.

8. ஒட்டுமொத்தமாக நீர் விநியோகம் வருங்காலத்தில் குடிநீர், விவசாயம், மாசுபடுத்தாத தொழிற்சாலைகளுக்கு என முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

9. பணப்பயிர்களுக்கு முன்னுரிமை வழங்காமல் மாற்றாக இயற்கை வழியில் உற்பத்தி செய்யும் உணவு பொருள் உற்பத்தி செய்யும் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.

10. காடுகள், கால்நடைகள்மேம்பாட்டிற்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

11. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் போர்கால அடிப்படையில் அகற்றப்படவேன்டும்.

உலக வங்கிக்கான கோரிக்கைகள்:

1. உள்நாட்டு நிர்வாகத்திலும், கோட்பாடுகளிலும், அந்த நாட்டு இறையான்மையிலும் உலக வங்கி தலையிட கூடாது.

2. உலக வங்கி கடன் கொடுக்கும்போது உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களை வலியுறுத்த கூடாது.

3. ஆள்குறைப்பு என்ற பெயரில் நீர் மேலாண்மையில் உள்ள கடைநிலை ஊழியர்களை வீ.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பும்போக்கு கூடாது.

4. மின்சார வாரியத்தை சீர்திருத்தம் என்ற பெயரில் மாற்றியமைக்க கூடாது.

5. தண்ணீர் வரி விதிக்க அரசுகளை நெருக்க கூடாது.

இந்திய அரசிற்கான கோரிக்கைகள்:

1. நாட்டின் ஒரு சிறிய சதவித மக்களின் நலன்களுக்காக பெருவாரியான மக்களின் நலன்களை புறக்கணிக்கும் உலகமயமாக்கல் கொள்கைகளில் இருந்து விடுபட்டு நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுயசார்பு, கிராம தன்னிரைவு கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்த முன்வர வேண்டும்.

உடனடி செயல்பாடுகள்:

இக்கோரிக்கைகளை மையப்படுத்திய செயல்பாடுகளில் ஈடுபடுவதன் அவசியம் பற்றிய விவாதங்கள் உணவு இடைவேளைக்கு பிந்தைய அமர்வில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கீழ்கண்ட வேலைகளில் உடனடியாக ஈடுபடுவது என தீர்மாணிக்கப்பட்டது.

  1. ஒவ்வொரு துணைவடிநில பகுதி வாரியாக கமிட்டிகளை உருவாக்க வேண்டும்.

  2. மாநில அளவில் குறைந்தபட்சம் 40 லிருந்து 50பேரை முழுமையாய் பயிற்றுவித்தல்.

  3. கிராம அளவில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கம் (Sustainable Livelihood Farmar Association (SLFA) – அந்தந்த கிராமங்களின் பெயர்களில் உருவாக்கவேண்டும்.

  4. ஜாசூல் மாவட்ட அமைப்புகள் அவர்களின் துணை வடிநிலபகுதிகளில் அந்தந்த இடத்தின் சூழ்நிலையை பொருத்து இந்த அமைப்பினை உருவாக்கும் பொறுப்பெடுக்கவேண்டும்.

இதனை தொடர்ந்து கிராம அளவில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கம் (SLFA) அமைப்பதற்கான தென் மண்டல ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

ஆக்கம்:

மாரிராஜன்.தி, மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாசூல் - தமிழ்நாடு