Friday, December 25, 2009

வடகிழக்கு பருவமழை:​ 11 மாவட்டங்களில் ​இயல்பைவிட அதிகம்

சென்னை,​​ டிச.​ 25: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக ஓய்ந்து வருகிறது.​ 11 மாவட்டங்களில் இயல்பான அளவை விட அதிகம் பெய்துள்ளது.​ மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வரை ஒட்டுமொத்தமாக பதிவான சராசரி மழையளவு 419.1 மில்லி மீட்டரை எட்டியுள்ளது.​ இது இயல்பான மழையளவை விட 15 சதவீதம் அதிகம்.​ புதுவையில் அதிக மழைப்பொழிவு:​​ புதுச்சேரியில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த சராசரி மழையளவு 846.7 மில்லி மீட்டராகும்.​ இது இயல்பான அளவை விட 39 சதவீதம் கூடுதலாகும்.​

சென்னை வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்களின்படி மாவட்ட வாரியாக கடந்த 83 நாள்களில் பெய்துள்ள மழையளவு,​​ அடைப்புக் குறிக்குள் இயல்பான மழையளவு ​(மில்லி மீட்டரில்)​ ​ விவரம்:

  1. அரியலூர் 584.6 ​(438.9) ​
  2. சென்னை 799.8 ​(725.1) ​
  3. கோயம்புத்தூர் 297.7 ​(320.1)
  4. கடலூர் 959.1 ​(694.3)
  5. தர்மபுரி 244.3 ​(311.8)
  6. திண்டுக்கல் 467.3 ​(386.6)
  7. ஈரோடு 324.6 ​(317.7)
  8. காஞ்சிபுரம் 757.1 ​(679.9)
  9. கன்னியாகுமரி 451.0 ​(418.5)
  10. கரூர் 343.5 ​(357.9)
  11. கிருஷ்ணகிரி 231.9 ​(287.8)
  12. மதுரை 301.8 ​(360.9)
  13. நாகப்பட்டினம் 1,339.9 ​(846.1) ​
  14. நாமக்கல் 207.5 ​(287.5)
  15. நீலகிரி 872.6 ​(359.3)
  16. பெரம்பலூர் 435.3 ​(43894)
  17. ​புதுச்சேரி 1,178.1 ​(846.7) ​
  18. புதுக்கோட்டை 478.7 ​(404.2)
  19. ​ராமநாதபுரம் 638.2 ​(486.8) ​
  20. சேலம் 243.6 ​(342.7)
  21. சிவகங்கை 438.1 ​(399.4)
  22. தஞ்சாவூர் 810.3 ​(525.6)
  23. தேனி 379.1 ​(373.8)
  24. திருநெல்வேலி 645.6 ​(411.4)
  25. திருவள்ளூர் 589.9 ​(588.6)
  26. திருவண்ணாமலை 436.5 ​(431.9)
  27. திருவாரூர் 955.2 ​(632.5)
  28. திருச்சி 384.6 ​(346.9)
  29. தூத்துக்குடி 488.2 ​(398.3)
  30. வேலூர் 238.8 ​(346.2)
  31. விழுப்புரம் 659.1 ​(472.1)
  32. விருதுநகர் 331.0 ​(420.0)​

தமிழகத்தில் மிக அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் தான் இயல்பான மழையளவை விட 143 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.​ இதைத் தொடர்ந்து அரியலூர்,​​ கடலூர்,​​ திண்டுக்கல்,​​ விழுப்புரம்,​​ நாகப்பட்டினம்,​​ ராமநாதபுரம்,​​ தஞ்சாவூர்,​​ திருவாரூர்,​​ தூத்துக்குடி,​​ திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இயல்பான அளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.​ இதர மாவட்டங்களிலும் இயல்பான அளவையொட்டி மழை பெய்துள்ளது.5 மாவட்டங்களில் மழையளவு வீழ்ச்சி:​​ தர்மபுரி,​​ நாமக்கல்,​​ சேலம்,​​ வேலூர்,​​ விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பான அளவை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.

Source> http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=174185

No comments: